• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“Selfie with Daughter” செயலியை தொடங்கி வைத்த ஜனாதிபதி

June 10, 2017 தண்டோரா குழு

“Selfie with Daughter” என்ற புதிய மொபைல் செயலியை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று தொடங்கி வைத்தார்.

கடந்த 2௦15ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தின் சிந்த் மாவட்டத்திலுள்ள பிபிபூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுனில் ஜக்லன் என்பவர் பெண் சிசுக்கொலை, மற்றும் பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை நடத்தி வந்தார்.

ஒரு பெண் குழந்தையின் பெற்றோராக இருப்பது எத்தனை பெருமையான விஷயம் என்பதை இந்த சமுதாயம் புரிந்துக்கொள்ளவும், குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பது தான் இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,

“பெண் சிசுக்கொலை மற்றும் பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு எதிரான இயக்கம் ‘Selfie With Daughter’ ஆகும். பாலின ஏற்றத்தாழ்வுகளால் எழும்பும் பல பிரச்சனைகளை கையாள்வதில் இந்த பிரசாரம் மிகவும் உதவியாக இருக்கும்.இந்த மொபைல் செயலி மூலம்,பெண் குழந்தையை பெற்றவர்கள் மகளுடன் இணைந்து செல்பி எடுத்து அதை இந்த செயலியில் பதிவு செய்யலாம். இதன் மூலம் பாலினம் குறித்த ஏற்றத்தாழ்வு குறையும்.

மேலும் இந்த மொபைல் செயலியை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்து, சுனில் ஜக்லனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

அமெரிக்காவின் சிலிக்கான் வாலியில், கூகுள், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகிய சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளது. அந்த நிறுவனங்களின் தலைவர்களை இந்திய பிரமதர் கடந்த 2௦15ம் ஆண்டு சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, ‘Selfie With Daughter’ சர்வதேச இயக்கமாக இருக்கும் என்று அப்போதே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க