• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பான் மன்னர் பதவி விலகல்?

June 10, 2017 தண்டோரா குழு

ஜப்பான் மன்னர் பதவி விலகுவது தொடர்பாக, அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிறைவேறியுள்ளது.

ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹிட்டோ(83), தனது பணிக்கு இடையூறாக இருக்கும் உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக தனது பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார். கடந்த 2௦௦ ஆண்டுகளில், ஜப்பான் நாட்டில் அரசர் பதவி விலகியது கிடையாது. ஜப்பான் நாட்டில் அரசர் பதவி விலகுவது இதுவே முதல்முறை ஆகும்.

எனவே மன்னர் பதவி விலகுவது குறித்து, ஜப்பான் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. மன்னர் ஓய்வு பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு, வரும் 2௦18ம் ஆண்டு நிறைவடையும்.

இது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறுகையில்,

“அரசருக்கு பிறகு பட்டத்து இளவரசர் நருஹிட்டோ(57) பதவி ஏற்பார் என்று கருதப்படுகிறது. அரசருக்கு ஹிஸாஹிடோ என்னும் சிறிய இளவரசரும், திருமணமாகாத 7 மகள்களும் உண்டு. பெண்கள் தங்கள் தகுதிக்கு கீழுள்ள ஒருவரை திருமணம் செய்துக்கொண்டால், தங்களுடைய ராஜ அந்தஸ்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், ஆண் வாரிசுகளுக்கு இந்த கட்டாயம் கிடையாது” என்று கூறினார்.

மேலும் படிக்க