June 14, 2017
தண்டோரா குழு
உலக இரத்த கொடையாளிகள் தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீஇராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
ஓவ்வொரு வருடமும் ஜூன் 14ம் தேதி உலக இரத்த கொடையாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஸ்ரீஇராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
இம்முகாமை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகஅறங்காவலர். வி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இராமகிருஷ்ணா மருத்துவமனையின் முதன்மையர் பி.சுகுமார் மற்றும் இயக்குநர்டாக்டர். ஐசக்கிறிஸ்டியன் மோசஸ்ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான விஸ்வநாதன்,பேரா.பிரகதீஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.