• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பகவதி காலமானார்

June 16, 2017 தண்டோரா குழு

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி இன்று டெல்லியில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.

மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போது பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதாடிய அவர்,1960-ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். 1973 ஆம் ஆண்டு அவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

பகவதி மறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“பி.என்.பகவதியின் இறப்பு பெரும் சோகத்தை கொடுக்கின்றது. அவரின் செயற்பாட்டால் இந்திய நீதித்துறை சுலபமாக அணுகக்கூடிய வகையில் மாறியது”.

என்று ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க