June 17, 2017
தண்டோரா குழு
குடியரசுத்தலைவர் தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்துள்ளார்.
இந்திய குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு ஜூலை 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
இதனால், ஆளும் பாஜக அரசும் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன் மக்கள் மத்தியில்பல தலைவர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பெயரும் பேசபட்டது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ் , “ நான் குடியசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக வெளிவந்த தகவல் உண்மையில்லை. வெளியுறவு துறை அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறினார்.