• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியா சுஷ்மா மறுப்பு

June 17, 2017 தண்டோரா குழு

குடியரசுத்தலைவர் தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்துள்ளார்.

இந்திய குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு ஜூலை 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இதனால், ஆளும் பாஜக அரசும் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன் மக்கள் மத்தியில்பல தலைவர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பெயரும் பேசபட்டது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ் , “ நான் குடியசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக வெளிவந்த தகவல் உண்மையில்லை. வெளியுறவு துறை அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறினார்.

மேலும் படிக்க