• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆம்புலன்ஸ் வருகையால் ஜனாதிபதி காரை நிறுத்திய ட்ராபிக் போலீஸ் குவியும் பாராட்டுக்கள்!

June 20, 2017 தண்டோரா குழு

பெங்களூருவில், ஆம்புலன்ஸ் செல்வதற்காக குடியரசுத் தலைவரின் காரையே தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த சனிக்கிழமை(ஜூன் 17)பெங்களூரில் மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பதற்காக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜ்பவன் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜனாதிபதி செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிக்க டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சப் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா நிறுத்தப்பட்டிருந்தார்.

அப்போது,அந்த வழியாக தனியார் மருத்துவமனை நோக்கி நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த நிஜலிங்கப்பா ஜானதிபதி கார் வருவதையும் பொருட்படுத்தாமல் அங்கு வந்து கொண்டிருத்த அனைத்து வானங்களையும் நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார்.

மேலும், பெங்களூரு கிழக்குப்பகுதி போக்குவரத்து ஆணையர் அபிசேகோயால் என்பவர் தன்னுடைய சமூக வலைத்தளபக்கத்தில் நிஜலிங்கப்பாவிற்கு பாராட்டு தெரிவித்ததோடு அவருக்கு சன்மானமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி காரையே நிறுத்தி ஒரு உயிரை காப்பாற்றி ஒரே நாளில் நிஜலிங்கப்பா அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க