• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெஸ்ட் அந்தஸ்து பெற்றது ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள்

June 22, 2017 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கி ஐசிசி அறிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டியில் நீண்ட காலமாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்த் வழங்கப்படாமல் இருந்தது. நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அசோசியேட் அணிகள் என்ற தகுதியை உயர்த்த வேண்டும் என்று ஐசிசியிடம் விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து இன்று நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை வாக்களிப்புக்கு விடப்பட்டது.அனைவரும் டெஸ்ட் தகுதியளிக்க ஏகமனதாக ஆதரவளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் டெஸ்ட் அந்தஸ்தது வழங்கி ஐசிசி அறிவித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்கள் தகுதியை இருநாடுகளும் பெறுகின்றன. இதனால் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க