June 23, 2017
தண்டோரா குழு
ரஜினியின் இளைய மகளும் விஐபி2 படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றதையடுத்து அவர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரானார். அதைப்போல் அவரது கணவர் அஸ்வின் ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விசாரணைக்கு பின்னர் ஜூலை 4 ம் தேதிக்கு விவாகரத்து குறித்த தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிகளுக்கு ஓர் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.