• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜனநாயக கடமையாற்றுவார்களா கமல். சூர்யா?

May 14, 2016 தண்டோரா குழு.

நாளை மறுதினம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்து நூறு சதவிகித வாக்குப்பதிவை எட்ட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் பட பூஜை விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், எனது ஓட்டைக் கடந்த முறை யாரோ மாற்றிப் போட்டுவிட்டார்கள் என்பதால் இந்தமுறையும் போடுவது சந்தேகமே எனத் தெரிவித்திருந்தார். மேலும் வாக்குப்பதிவு அன்று தான் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்வதாக தெரிவித்த கமல் தன்னுடைய பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் குற்றம்சாட்டினார். இதையடுத்து தேர்தல் ஆணையம் கமல் மற்றும் கவுதமியின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பதிலடி கொடுத்தனர். ஆனால் இது குறித்து கமல் விளக்கம் கொடுக்கவில்லை. வரும் திங்களன்று தான் அவர் ஜனநாயக கடமை ஆற்றுவாரா இல்லையா எனத் தெரியவரும்.

அதே போல கடந்த ஏப்ரல் 30ம் தேதி குடும்பத்துடன் இருவார ஓய்விற்காக அமெரிக்கா சென்ற சூர்யா தற்போதும் அமெரிக்காவில் தான் உள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தமிழக மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களித்து நூறு சதவிகிதம் வக்குப்பதிவை உறுதி செய்யவேண்டும் என ஆயிரம் முறை விளம்பரத்தில் கூறியிருப்பார். இந்நிலையில் அவரே வந்து ஒட்டு போடவில்லை எனில் அவரது ரசிகர்கள் அனைவரும் ஒட்டு போடுவார்களா என்பதே சந்தேகமாகிவிடும். இந்நிலையில் திங்கள் அன்றுதான் இருவரும் ஜனநாயக கடமை ஆற்றுவார்களா இல்லையா என்பது தெரியும்.

மேலும் படிக்க