• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேஸ்புக் நிறுவனத்தை பாராட்டிய கேரள முதல்வர் ஏன் தெரியுமா?

June 23, 2017 தண்டோரா குழு

புரொபைல் பிக்சர்களைப் பாதுகாப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளமான பேஸ்புக்கில் அடுத்தவர்கள் புரொபைல் பிக்சர்களை யார் வேண்டுமானாலும் எளிதில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதனால் பல பெண்கள் அச்சப்பட்டு தங்கள் நிஜ புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிராமல் இருந்தனர். இதையடுத்து, அடுத்தவர்கள் புரொபைல் பிக்சர்களைப் பாதுகாப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பிற்காக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேஸ்புக் நிறுவனத்தை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

இந்த வசதி இந்தியாவில் ஆன்லைன் பாதுகாப்பினை உறுதி செய்யும் என்றும் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஷெரீல் சேன்ட்பெர்க்கின், ஆன்லைனில் பெண்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் பெண்களுக்கு நீங்கள் பாதுகாப்பு அளித்தால், சமூகத்துக்கே பாதுகாப்பு அளிப்பது போல என்ற கருத்தை மேற்கோள் காட்டி பினராயி விஜயன் தனது பதிவை பதிவிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க