• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நதிநீர் இணைப்பு பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

June 27, 2017 தண்டோரா குழு

நதிகளை இணைப்பதில் கவனம் செலுத்தி அந்த பணிகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் இநாப்பு பிரச்னைகளால் தமிழக விவசாயிகள் மிகுந்த துயரத்தை சந்தித்து வருவதாக கூறியுள்ளார். தமிழகத்திற்கான நீர் ஆதாரங்களை முடக்குவதும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தங்களை மீறி தடுப்பணைகளை கட்டுவதும்,

மேலும், கேரளா அரசும், ஆந்திரா அரசும் முல்லை பெரியாறு மற்றும் பாலாற்றின் மீது தடுப்பணை கட்டுவது உள்ளிட்டவை நடைபெற்று வருவதால் நதி நீர் இணைப்புதான் இதற்கு உன்னத தீர்வு என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கான பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக நதி நீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்ற வேண்டும்.

ஆகையால், மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைப்பதோடு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க