• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூர் அருகே டீ தூள் லாரி கவிழ்ந்து விபத்து

June 28, 2017 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே டீதூள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய உதவியாளரை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள தனியார் டீதூள் குடோனில் இருந்து டீ தூள் மூடைகளை ஏற்றிக் கொண்டு கிணத்துக்கடவுக்கு லாரி சென்றுள்ளது. லாரியை ஹனிபா என்பவர் ஓட்டியுள்ளார்.

லாரி கோவை மேட்டுப்பாளையம் சாலைக்கு வரும்போது அங்கு கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழியில் லாரியின் பின் பக்க சக்கரம் சிக்கியது. லாரியின் பாரம் தாங்காமல் லாரி இடதுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த உதவியாளார் ராஜா என்பவர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் லாரியின் அடியில் சிக்கிய ராஜாவை மீட்க ஜாக்கிகளை பயன்படுத்தி முயற்சி செய்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் படிக்க