• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்க சுதந்திர விழாவில் இரண்டு இந்திய வம்சாவளிகளுக்கு விருது

July 1, 2017 தண்டோரா குழு

அமெரிக்க நாட்டில் இரண்டு இந்திய வம்சாவளிகள் சிறந்த குடிபெயர்ந்தவர்களாக அமெரிக்க அரசால் கவுரவிக்கப்பட உள்ளனர்.

அமெரிக்காவில் சுதந்திர தினம் வரும் ஜூலை 4ம் தேதி கொண்டப்படவுள்ளது.இவ்விழாவில் இந்திய வம்சவாளியான சந்தானு நரேன் மற்றும் விவேக் மூர்த்தி ஆகியோருக்கு ‘சிறந்த குடியேறிவர்கள்’ விருது வழங்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் பிறந்த விவேக் மூர்த்தி(39), பிரபல ஹார்வர்ட் மற்றும் யாலே கல்லூரியின் முன்னாள் மாணவர். கடந்த 2014ம் ஆண்டு, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவால் அந்நாட்டின் மருத்துவ ஜெனரல் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் ஆவார். ஆனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றிய பிறகு, அவரை அந்த பதவியிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார்.

சந்தானு நரேன்(55) ஹைதராபாத் நகரில் பிறந்தவர். அமெரிக்காவின் பெர்கிலே நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலை பட்டமும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படத்தில் முதுநிலை பட்டமும் மற்றும் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

மேலும் அவர் (USIBC) உறுப்பினர் ஆவார். அதிபர் டிரம்பை சந்திக்க வந்த போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வந்த சிஇஒ குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க