• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

420 ரஜினிகாந்த் சூதாட்ட விடுதியில் சிகிச்சை பெறுகிறாரா?

July 6, 2017 தண்டோரா குழு

அமெரிக்க கேசினோவில் ரஜினிகாந்த் சிகிச்சை பெறுகிறாரா? என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டிவிட் செய்துள்ளார்.

மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின், அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவில் கேசினோ ஒன்றில் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை நெட்டிசன்கள் பரப்பி கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், ரஜினியின் கேசினோ விசிட் பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டார் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், வாவ்! 420 ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சூதாட்ட விடுதியில் வைத்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். அமலாக்கத்துறை அவரிடம் இருக்கும் பணம் எப்படி வந்தது என்று விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியசாமி ரஜினியை தொடர்ந்து 420 என கூறி வருவது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க