• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

3 எம்.எல்.ஏகளின் நியமனம் செல்லாது – புதுச்சேரி முதலமைச்சர்

July 6, 2017 தண்டோரா குழு

கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கக்கூடாது, ஆகையால் ஆளுநர் நியமித்த 3 எம்.எல்.ஏகளின் நியமனம் செல்லாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“புதுச்சேரியில் மத்திய அரசு, மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது. அவர்களுக்கு ஆளுநர் கிரண்பெடி ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த செயல் கண்டனத்திற்குரியது.

தற்போது பதவியேற்றுள்ள பா.ஜ.க வை சேர்ந்த சாமிநாதன் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர். சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கக்கூடாது.

இதனால் இவர்களது இந்த நியமனம் செல்லாது. சபாநாயகர் இருக்கும்போது ஆளுநர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பலமுறை மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளேன். இந்த விஷயத்திலும் அவர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து குடியரசுத்தலைவரிடம் புகார் செய்வேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க