• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் தாலி குறித்த புரளியால் பரபரப்பு!

July 6, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவில் தாலியில் பவள மணி இருந்தால், கணவருக்கு ஆபத்து வரும் என்று எழும்பிய புரளியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் தாலியில் பவள மணியை அணிவது வழக்கம். ஆனால், செவ்வாய்க்கிழமை(ஜூன் 4) இரவு, பெண்களின் தாலியில் பவள மணி இருந்தால், புதன்கிழமை அவர்களுடைய கணவருக்கு ஆபத்து வரும் என்று யாரோ புரளியை எழுப்பியுள்ளார்கள். இதை கேட்ட பெண்கள், தங்கள் கணவருக்கு ஆபத்தோடு, மரணமும் ஏற்படும் என்று நம்பத்தொடங்கினர்.

இதையடுத்து, கர்நாடக மாநிலத்தின் கோப்பல், சித்திரதுர்கா, பல்லாரி, தவான்ஜெரே மற்றும் ராய்ச்சூர் மாவட்டத்தின் பெண்கள் தங்கள் கணவரை காப்பாற்ற தங்கள் தாலியிலிருந்த பவள கற்களை கற்களால் நொறுக்கினர், சிலர் தங்கள் தாலியை கழற்றி வைத்துவிட்டனர்.

இதனையடுத்து பெண்கள் இந்த புரளியை நம்பவேண்டாம் என்று அம்மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வதந்திகளை பரப்புவோரை கைது செய்யவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று துணை ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“அதேபோல் கர்நாடக மாநிலத்தில் சுமார் 2௦ ஆண்டுகளுக்கு முன் விநாயகர் சிலை பால் குடிக்கிறது என்று புரளி கிளம்பியது. இதை யார் கிளப்பினார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. பவள கல்லுக்கும் மனித உயிருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. பல நூற்றாண்டுகளாக பெண்களின் பவள கல்லை தங்கள் தாலியில் அணிந்து வருகின்றனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க