• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு

July 6, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் மிருகவதை நடைபெறுவதாக கூறி விலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.இதனால், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதையடுத்து இந்தாண்டு இளைஞர்கள் மற்றும் மக்களின் மாபெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழக சட்டசபையில் இதுதொடர்பாகச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜனவரி பிப்ரவரியில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சியாக நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது பீட்டா அமைப்பு 2017-ல் நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக ஆதாரத்தோடு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், மிருகவதைக்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் தாக்கல் செய்துள்ளது.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் பீட்டா மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புதிய சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க