• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீனவர்கள் தீக்குளிப்பு போராட்டம் அறிவிப்பு

July 8, 2017 தண்டோரா குழு

இலங்கை அரசின் அபராத விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தை அறிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மீன்வர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக ராமேஸ்வரத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் ,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும். இலங்கை கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெறவேண்டும். பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தலைமை தபால் நிலையம் அருகே ஜூலை 14ல் தீக்குளித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு.

மேலும் படிக்க