• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் திலீப்புக்கு 2 நாள் காவல்

July 12, 2017 தண்டோரா குழு

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலிப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரள முன்னணி நடிகையை கடத்தி, அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், மலையாள நடிகர் திலீப், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின், ஆலுவா கிளைச்சிறையில், அடைக்கப்பட்டார். இந்நிலையில், திலீப்பின் ஜாமின் மனு, இன்று(ஜூலை 12) விசாரணைக்கு வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் திலீப்பை அங்கமாலி நீதிமன்றத்தில் கேரள போலீசார் ஆஜர்படுத்தினர்.

நடிகர் திலீப்பை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டனர். இதையடுத்து, நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலிப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுத்தது அங்கமாலி நீதிமன்றம்.

மேலும் படிக்க