• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல் பெண் பவுன்சர்(கேளிக்கை விடுதி பாதுகாவலர்)!

July 15, 2017 தண்டோரா குழு

புதுதில்லியின் கேளிக்கை விடுதியில் ஒரு இளம்பெண் அதிரடி பாதுகாவலராக பணியாற்றி வருவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

புதுதில்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் ‘பௌன்சர்’ என்று அழைக்கப்படும் அதிரடி பாதுகாவலர்கள் பணியாற்றி வருவது வழக்கம். மேஹரூனிசா என்னும் இளம் பெண் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த அவர் ராணுவத்தில் அல்லது காவல்துறையில் சேரவேண்டும் என்று விருப்பம். ஆனால், அவருடைய கனவு நனவாகவில்லை. இதையடுத்து அந்த கேளிக்கை விடுதியில் பணியாற்றி வருகிறார்.

அந்த விடுதியின் மதுபான கூடத்தில் நடைபெறும் சண்டையை சமாளிப்பது, அங்கு வருவோரை சோதனை செய்யும்போது, போதை பொருட்களை இருப்பதை அறிந்தால், அவர்களை தடுத்து நிறுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

அவருடைய 27 வயது சகோதரி தரனும் ஒரு அதிரடி பாதுகாவலர். மேஹரூனிசா பணி புரியும் விடுதிக்கு அருகில் அவருடைய சகோதரியும் பணிபுரிகிறார். இருவருக்கும் ஒரு மாதத்திற்கு 3௦,௦௦௦ ரூபாய் வருமானமும் கிடைக்கிறது. இருவரும் தங்கள் பணிகளில் சிறந்து விளங்குகின்றனர்.

விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று பெண் காவலர்களை பணியில் அமர்த்தினோம். அந்த பணிக்கு மேஹரூனிசா ஏற்ற ஒருவர் என்று அந்த விடுதியின் உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க