• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மித்தாலி ராஜுக்கு சாமுண்டேஸ்வரநாத்தின் பிஎம்டபிள்யூ கார் பரிசு!!

July 24, 2017 tamilsamayam.com

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர் மித்தாலி ராஜூக்கு இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் சாமுண்டேஸ்வரநாத் பிஎம்டபிள்யூ கார் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை நேற்று சாமுண்டேஸ்வரநாத் அறிவித்தார். பல விளையாட்டு பிரபலங்களுக்கும் இதுபோன்று கார்களை சாமுண்டேஸ்வரநாத் வழங்கியுள்ளார்.நேற்று ஐசிசி உலகக் கோப்பை 2017 கிரிக்கெட்டில் இங்கிலாந்துடன் போராடி இந்தியா தோற்ற பின்னரும் கார் பரிசாக வழங்குவதாக சாமுண்டேஸ்வரநாத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சாமுண்டி கூறுகையில்,

“பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு தேவைப்படுகிறது. கடந்த 2007ல் செவ்ரோலெட் கார் பரிசு வழங்கி இருந்தேன். ஆனால், தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை இவ்வளவு காலம் வெற்றிகரமாக நடத்தி சென்ற மித்தாலி ராஜூக்கு வழங்க முன் வந்துள்ளேன். இந்த முறை அவருக்கு செடான் கார் வழங்க உள்ளேன். இங்கிலாந்தில் நமது பெண்கள் அணியினர் விளையாடிய விதம் பலரையும் பெண்கள் கிரிக்கெட் பக்கம் ஈர்த்துள்ளது”என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி வெற்றியாளர்களான சாக்ஷி மாலிக், பி.வி.சிந்து ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கினார். இந்தக் கார்களை ஐதராபாத்தில் நடந்த சிறிய விழாவில் சச்சின் டெண்டுல்கர் வழங்கி இருந்தார்.

மேலும் படிக்க