தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் – 7 பெரிய துண்டுகள்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டனை நீர் ஊற்றி நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மட்டன் மற்றும் எண்ணெயைத் தவிர, இதர பொருட்களைப் போட்டு நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அகன்ற தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி, மட்டன் துண்டுகளைப் போட்டு தீயைக் குறைத்து 15 நிமிடம் வேக வைத்து, மட்டனை திருப்பிப் போட்டு 12 நிமிடம் வேக வைத்து, பின் தீயை அதிகரித்து 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், மொறுமொறுப்பான மட்டன் சாப்ஸ் ரெடி!!!
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்