• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சற்குணம் இயக்கத்தில் மாதவன்!

July 25, 2017 tamilsamayam.com

நடிகர் மாதவன் அடுத்ததாக இயக்குனர் சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த மாதவன் அடுத்ததாக ‘களவாணி’ பட இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிக்கிறார். சாக்லேட் பாய் இமேஜுடன் களமிறங்கிய நடிகர் மாதவன், ஒருகட்டத்தில் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். பல வருடங்கள் கழித்து ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் மீண்டும் அவரைத் தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் சுதா கொங்கரா. அதைத் தொடர்ந்து மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’, கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

படத்தில் மாதவனும், விஜய் சேதுபதியும் போட்டி போட்டு நடித்துள்ளனர். படம் எல்லா இடங்களிலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்த படக்குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். அடுத்ததாக, நடிகர் மாதவன், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மாதவன் நிரந்தரமாக மும்பையில் தங்கியிருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் மட்டும் அவர் சென்னை வந்து செல்வார்.

மேலும் படிக்க