• Download mobile app
26 Jun 2024, WednesdayEdition - 3059
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போதை பொருள் விவகாரத்தில் நடிகை முமைத்கான் நேரில் ஆஜர்

July 27, 2017 தண்டோரா குழு

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகை முமைத்கான் இன்று ஆஜரானார்.

சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நவ்தீப், சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை முமைத்கான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தார். மேலும், விசாரணைக்கு வர சொல்லி தனக்கு எந்த நோட்டீஸூம் வரவில்லை என கூறியிருந்தார்.

இதனையடுத்து பிக் பாஸ் நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முமைத்கான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் இன்று காலை நடிகை முமைத்கான் விசாரணைக் குழு முன் ஆஜரானார்.

மேலும் படிக்க