July 27, 2017
தண்டோரா குழு
அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நடத்தினால் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்சிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
அப்போது ஸ்டாலின் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த அவர் அனுமதி பெறாமல்மனித சங்கிலி போராட்டம் நடத்தினால், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என்றார்.