July 28, 2017
தண்டோரா குழு
அதிமுக அணிகள் இணையும் என நம்புகிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
“தமிழக அரசு நீட் நுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் விவகாரத்தில் மாநில அரசை பொறுத்தவரை மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு செயல்படுகிறது,” என்றார்.
அதிமுக அணிகள் குறித்த கேள்விக்கு “அதிமுக அணிகள் இணையும் என்று நம்புகிறேன்,” என்றார்.