July 29, 2017
தண்டோரா குழு
தென் மேற்கு பருவமழை இயல்பை விட 28 சதவீதம் குறைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் 8 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
தென்மேற்கு பருவமழையை பொறுத்த வரை இயல்பை விட 28 சதவீதம் குறைவாக தான் பதிவாகிவுள்ளது. வழக்கமாக ஜூன் முதல் ஜூலைவரை12 செ.மீ., மழை பதிவாகும் ஆனால்இந்த காலகட்டத்தில் 8 செ.மீ., மழை தான் பதிவாகியுள்ளது,” என்றார்.