• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இவிங்கனால கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திட்டேன்: ரணதுங்கா!

August 3, 2017 tamilsamayam.com

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மட்டமான தோல்விக்கு பின் இலங்கை அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நிறுத்திவிட்டதாக முன்னாள் இலங்கை அணி கேப்டன் ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலங்கை சென்ற ஜிம்பாப்வே அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இது ஜிம்பாப்வே அணிக்கு பெருமையான விஷயம் என்றாலும் இலங்கை அணிக்கு மகாமட்டமான விஷயம்.

இதனால், இலங்கை முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை இலங்கை அணி வீரர்கள் மீது கடுமையான காட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் முன்னாள் இலங்கை அணி கேப்டன் ரணதுங்க, தனது அணி, பங்கேற்கும் போட்டியை பார்ப்பதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரணதுங்கா கூறுகையில்,

“இலங்கை கிரிக்கெட்டை அதிகாரிகள் நிர்வாகிக்கும் விதம் மிகவும் மட்டமாக உள்ளது. இதனால் தான் இலங்கை அணி, கத்துக்குட்டி அணியிடம் மண்ணைக்கவ்வும் நிலை உள்ளது. தற்போது இலங்கை அணி பங்கேற்கும் போட்டிகளை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.” என்றார்.

மேலும் படிக்க