• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியாக விமானத்தில் பயணித்த 5 வயது சிறுமி ; அன்பு காட்டிய ஊழியர்கள்

August 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவன விமானத்தில் பயணித்த 5 வயது சிறுமிக்கு, அந்த விமான ஊழியர்கள் காட்டிய அன்பு பலருக்கு நெகிழ்ச்சியை தந்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தின் ஒர்லாண்டோ நகரத்திலிருந்து கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் எஞ்சிலஸ் நகருக்கு சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் பயணித்துள்ளது. அந்த விமானத்தின் ஆஷ்லே ஸ்காட்ஸ் என்னும் 5 வயது சிறுமி பெற்றோருடைய துணையில்லாமல் தனியே பயணித்துள்ளாள்.

5 வயதுக்கு மேலான குழந்தைகளை பெற்றோர்கள் துணையில்லாமல் தனியே பயணிக்க அந்நிறுவனம் அனுமதிக்கிறது. ப்ளோரிடா மாகணத்தில் இருந்து கலிபோர்னியா மாகாணத்திற்கு செல்ல நேரடி விமானம் கிடையாது. அதனால், அமெரிக்காவின் ஒமஹா விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய வேண்டும்.

ஒமஹா விமான நிலையத்திலிருந்து லாஸ் எஞ்சிலஸ் நகரில் இருக்கும் தன்னுடைய தாயாரை, தனது டேபிலேட் மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளாள். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை கவனித்த அந்த விமானத்தின் ஊழியர், தன்னுடைய கைபேசியை ஆஷ்லேவுடன் கொடுத்து, அதிலிருந்து பேச சொல்லியுள்ளார். மகிழ்ச்சி அடைந்த ஆஷ்லே அவளுடைய தாயாரை தொடர்புக்கொண்டு பேசியுள்ளாள்.

விமானத்தில் ஏறுவதற்கு முன் சில உணவு பொருட்களை வாங்கியுள்ளாள். விமான ஏறிய பிறகும், அவளுக்கு பசியாக இருந்தது. இதை கவனித்த அந்த விமானத்தின் பைலட், விமானத்திலிருந்து கீழே இறங்கி, விமான நிலையத்திலிருந்த கேஎப்சி உணவகத்திலிருந்து, அவளுக்கு கேஎப்சி சிக்கன் துண்டுகளையும் உருளைக்கிழங்கு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவையும் வாங்கி வந்து ஆஷ்லேவுக்கு தந்துள்ளார்.

ஆஷ்லே வீடு திரும்பியதும், விமானத்தில் நடந்ததை தன் தாயிடம் கூறியுள்ளாள். ஆச்சரியம் அடைந்த அவளுடைய தாயார், உடனே தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க