• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரோஜர்ஸ் கோப்பை: போராடித் தோற்றது போபண்ணா இணை

August 16, 2017 tamilsamayam.com

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – குரோஷியாவின் இவான் டோடிக் இணை போராடித் தோற்றது.

டொரணன்டோவில் நடக்கும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின்ன் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இணை, அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் தென்னாப்ரிக்காவின் ரேவன் கிளாசன் இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்சின் ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் மற்றும் நிக்கோலஸ் மகுட் இணைக்கு எதிராக களமிறங்கியது போபண்ணா – டோடிக் இணை. இப்போட்டியில், கடுமையாகப் போராடிய போபண்ணா இணை முதல் செட்டை 4-6 என இழந்தது. பின்னர் சுதாரித்து ஆடி 6-3 என இரண்டாவது செட்டை வசப்படுத்தியது. அடுத்து நடந்த டை பிரேக்கர் செட்டில் 6-10 என தோல்வியடைந்து ஏமாற்றியது.

இதனால், 4-6, 6-3, 6-10 என்ற செட்களில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

மேலும் படிக்க