• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘யார் எட்டப்பர் என ஜெயக்குமார்,கண்ணாடி முன் நின்று பார்த்தால் தெரியும்’ – டிடிவி தினகரன்

August 16, 2017 தண்டோரா குழு

யார் எட்டப்பர் என்பது அமைச்சர் ஜெயக்குமார், கண்ணாடி முன் நின்றுப் பார்த்தால் தெரியும் என்று அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“எங்களால் உருவாக்கப்பட்ட அரசு தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கட்சியை கொல்லைப் புறமாக கைப்பற்ற அமைச்சர்களும் நிர்வாகிகளும் சதி செய்து வருகின்றனர்.இதுபோன்ற செயல்கள் செய்வதை அவர்கள் நிறுத்த வேண்டும், இல்லை என்றால் அவர்கள் திருத்தப்படுவார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தலுக்காக என்னுடன் ஓட்டு கேட்டவர்கள் தான் இப்போது எனக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மாற்றிப் பேசுவதற்கு பயம் தான் காரணம்.

ஜெயக்குமாருக்கு பதவி கொடுத்தது சசிகலா தான். யார் எட்டப்பர் என்பது ஜெயக்குமார் கண்ணாடி முன் நின்று பார்த்தால் தெரியும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க