August 22, 2017
kalakkalcinema.com
தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் சிரஞ்சீவி, எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் அவர்களுக்கு இணையாக நடிப்பில் அசத்தி வருகிறார்.
இவருடைய 151-வது படம் தற்போது தொடங்கவுள்ளது, இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெகபதி, சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி, நாசர் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.
பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடிப்பதால் திரை உலக ரசிகர்களுக்கும் இந்த படம் மிக விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.