August 23, 2017
தண்டோரா குழு
சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு புதிய விமான சேவையை தொடங்கப் போவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி கூறுகையில்,
“பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும்,
அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதால்,இந்த சேவையை தொடங்கவுள்ளோம்.
மேலும் இந்த விமான சேவையை ஏர்இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வருகிற 30-ந் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளோம்.இந்த விமான சேவையில் 70 பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது.
இந்த விமான சேவை ஒரு நாளையில் ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே அளிக்க இயலும் எனவும்,மேலும் சிறிய ரக விமானங்கள் வந்த பின்னர் காலை, மாலை என தினமும் இரண்டு முறை விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.