• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கெண்டை மீன் வறுவல்

August 24, 2017 manakkumsamayal.com

தேவையான பொருட்கள்:

மீன் – கால் கிலோ
தேங்காய்த்துருவல் – அரை மூடி
புளி – சிறிதளவு
வெங்காயம் – 1
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
சாம்பார் மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு மிக்சியில் தேங்காய்த்துருவல், வெங்காயம், பெருஞ்சீரகம் இவை மூன்றையும் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையைப் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள் போட்டு பிசறி வைத்துக் கொள்ளவும்.

பின்பு சிறிதளவு புளியை கரைத்து அதில் ஊற்றி கொள்ளவும். அதன் பிறகு அதில் உப்பு போட்டு மீனையும் போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டு, எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி இரண்டு அல்லது மூன்று துண்டு மீனை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் ரெடி.

மேலும் படிக்க