• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

August 24, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவாளர்களான 19 எம்எல்ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். இதனால், முதல்வர் பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் எம்.எல்.ஏ.க்களை விலை பேச வாய்ப்புள்ளது. 19 எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு அளித்த கடிதம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மு.க.ஸ்டாலின் கடிதம் மீதம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க