• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2௦ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன உடல்கள் கண்டெடுப்பு

August 24, 2017 தண்டோரா குழு

இத்தாலி நாட்டில் உள்ள மிகப்பெரிய பனிமலை சிகரமான மொன்ட் பிளான்க்கில் சுமார் 2௦ ஆண்டுகளுக்கு முன், மலையேற சென்று காணாமல் போன 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த மலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் மலையேற சென்றுள்ளார்.அப்போது அவர் மலை எரிக்கொண்டிருந்த பகுதியில் 3 பேருடைய உடல்கள் பனிக்குள் புதைந்திருப்பதை பார்த்துள்ளார். உடனே அந்த உடல்களை புகைப்படம் எடுத்து, மீட்பு சேவைக்கு தகவல் தந்துள்ளார். தகவல் அறிந்த அவர்கள் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். அந்த 3 பேரின் உடல்களை அங்கிருந்து மீட்டு, பிரேத சோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 2௦ ஆண்டுகளாக அந்த உடல்கள் அங்கு புதைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரான்ஸ், செக் குடியரசு, தென் கொரியா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள், மொன்ட் பிளான்க் பகுதியில் மலையேற வருகிறார்கள். அப்படி வரும்போது, விபத்தில் சிக்கி உயிரழந்து விடுகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில், சுமார் 75 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதினரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க