• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பானில் 2-ம் உலக போரில் அணுகுண்டு வீச்சில் தப்பியவர் மரணம்

September 1, 2017 தண்டோரா குழு

ஜப்பானில் இரண்டாம் உலக போரின் போது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு வீச்சில் காயத்துடன் உயிர் தப்பிய டானிகுச்சி(88) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார்.

கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் இறுதியில், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நாகாசாகி ஆகிய இரண்டு நகரங்கள் மீது அமெரிக்க அணுகுண்டை வீசியது.இதில் சுமார் 7௦,௦௦௦ பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.அப்படி உயிர் தப்பியவர்களில் டானிகுச்சியும் ஒருவர்.

இச்சம்பவம் நடந்தபோது அவருக்கு 16 வயது, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.8 கிலோமீட்டர் தூரத்தில் தனது சைக்கிளில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, அணுகுண்டு வீசப்பட்டது.அதில் அவருடைய முதுகு மற்றும் இடது கையில் பலத்த தீ காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். பின்னர் தபால்காரராக பணி செய்தார்.

இதன்பிறகு, அணுகுண்டு தயாரிப்பு மற்றும் அதை பயன்படுத்துவதை எதிர்த்து போராடி வந்தார். அதன் காரணமாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது. கடைசியாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நோய்க்கு கூட அணுகுண்டு வீச்சு தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 31) காலமானார்.

மேலும் படிக்க