September 18, 2017
tamil.samayam.com
சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, இன்று சென்னையில் துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. இதன் பின் மழை குறுக்கிட்டதால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் ஆஸ்திரேலிய அணிக்கு 21 ஓவர்களில் 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு அறிமுக வீரர் கார்ட் ரைட்(1), கேப்டன் ஸ்மித் (1), ஹெட் (5) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். வார்னர் (25) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.