• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்களின் பிரச்சனைகள் குறித்த படத்தில் நடிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார்

September 20, 2017 தண்டோரா குழு

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் பிரியதர்ஷினி. இவர் பெண்களின் தற்போதைய பிரச்சனைகளை கதைக்களமாக கொண்டு ஒரு படத்தினை இயக்கவுள்ளார்.

இப்படம், மிகவும் தனித்தன்மையானது என்றும், ஆக்ஷன், மர்மம், பயணம், திகில் என எல்லாமும் கலந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷினி கூறும்போது,

வில்லனுடன் கண்ணாம்பூச்சி ஆடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார். பூனை எலியைத் துரத்தும், ஆனால் எலி தந்திரமாகத் தப்பித்துவிடுவதுடன் பூனையை எப்படி காலி செய்கிறது என்பதான எளிமையான கதை தான். ஆனால் திரைக்கதையில் வித்தியாசம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ‘முன்னனி ஹீரோ ஒருவரிடம் கதை சொல்லியிருக்கிறோம், அவர் ஓகே சொல்லிவிட்டால், அவர் தான் படத்தின் வில்லன்’ என்றும் அவர் கூறியுள்ளார். அதைபோல், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 30-ம் தேதி விஜயதசமி அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க