• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய உள்விளையாட்டு தடகளம்; தமிழக வீரா் உள்பட 2 போ் தங்கம் வென்றனா்

September 21, 2017 tamilsamayam.com

ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகள போட்டியில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரா் லட்சுமணனும், பெண்களுக்கான ஆயிரத்து 500 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை சித்ராவும் தங்கப்பதக்கம் வென்றனா்.

5-வது ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் மற்றும் தற்காப்பு கலை போட்டி துர்க்மெனிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் 8 நிமிடம் 02.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

சவுதிஅரேபியா வீரர் தாரிக் அகமது வெள்ளிப்பதக்கமும் (8 நிமிடம் 03.98 வினாடி), ஈரானின் கிஹானி உசேன் வெண்கலப்பதக்கமும் (8 நிமிடம் 07.09 வினாடி) பெற்றனர்.

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சித்ரா 4 நிமிடம் 27.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மேலும் படிக்க