• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டால்பின்களின் உயிரைக் காத்த உலகின் உயரமான மனிதன்

June 22, 2016 தண்டோரா குழு

உலகில் தற்போது வாழும் மிக உயரமான மனிதராக கின்னஸ் சாதனைப் படைத்துள்ள மொங்கோலியரான பாவோ சிசுன், இரண்டு டால்ஃபின்களை காப்பாற்றியுள்ள விவகாரம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

சீனாவின், லியோனிங் மாகாணத்தில் உள்ள ஃபுஷுன் என்னும் டால்பின்கள் காப்பகத்தில் இரு டால்பின்கள் பிளாஸ்டிக் துகள்களை தவறுதலாக விழுங்கியதால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அவற்றின் வயிற்றுப் பகுதியில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் துகள்களை மீட்டெடுக்க இயந்திரங்கள் முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து பாவோ சிசுனுக்கு தகவல் தரப்பட்டு அவரை அங்கே வரும்படி அழைப்பு விடப்பட்டது.
பாவோவின் உயரம் சுமார் 7 அடி ஆகும். அவரது கையின் நீளம் மாத்திரம் சுமார் 1.06 மீட்டர்.

டால்பினின் வாய் வழியாகத் தனது கைகளை நுழைத்த பாவோ, பிளாஸ்டிக் துண்டுகளை வெளியில் எடுத்துவிட்டார். இந்த டால்பின்கள் பசி இல்லாமல் மற்றும் மன அழுத்தம் உண்டாகி மிகுந்த வேதனை அடைந்து இருந்தன என்று கடல் நீர்வால் அருங்காட்சியத்தின் அதிகாரிகள் கூறினர்.

மேலும், பாவோவின் கையை டால்பின்கள் கடிக்காதவாறு அவற்றின் வாய் துவாலையால் போர்த்தப்பட்டு இருந்தது. டால்பின்களிடமிருந்து பெருமளவிலான பிளாஸ்டிக் துகள்கள் வெளியே எடுக்கப்பட்டு விட்டதால் அவை விரைவில் மீண்டும் ஆரோக்கியம் அடைந்து விடும் என்று காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாவோ கடந்த வருடம் தான் உலகின் மிக உயரமான மனிதனாக கின்னஸ் சாதனை படைத்தார். முன்னதாக துனிசியாவை சேர்ந்த சார்பிப் என்பவர் இருந்தார். அவரை விட 2 மில்லி மீட்டர் உயரம் கூடுதலாக இருந்ததால் பாவோ இச்சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க