November 9, 2017
kalakkalcinema.com
தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து சிவா இயக்கத்திலேயே நடித்து வருகிறார். இவரின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்க உள்ளார்.
இந்த படத்தையும் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தற்போது தொகுப்பாளி ரம்யா பேட்டி ஒன்றில் தகவல் ஒன்றை கூற அது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
ஆம், பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர் ரம்யாவிடம் நீங்கள் அஜித் சாரிடம் ஒரு கேள்வியை கேட்டால் என்ன கேட்பீர்கள் என கேட்க அதற்கு ரம்யா நீங்களும் மணிரத்தினம் சாரும் இணைந்து பொன்னியின் செல்வன் கதையில் நடிக்க இருப்பதாக கேள்விப்பட்டேன். அது எப்போது நடக்கும் என கேட்பேன் என்று கூறியுள்ளார்.