• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை தொடரில் உலக சாதனை படைக்க காத்திருக்கும் அஷ்வின்!

November 14, 2017

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மேலும் ஒரு உலக சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 16ல் கொல்கத்தாவில் துவங்கவுள்ளது.

இத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மேலும் ஒரு உலக சாதனை படைக்கவுள்ளார்.

இத்தொடரில் அவர் இன்னும் 8 விக்கெட் கைப்பற்றும் பட்சத்தில், சர்வதெச டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற புதிய உலக சாதனை படைப்பார்.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி (56 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார்.

இதுவரை அஷ்வின் 52 டெஸ்டில் 292 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இத்தொடரில் 3 டெஸ்டிலும் சேர்த்து மொத்தமாக 8 விக்கெட் கைப்பற்றினால் கூட லில்லியின் உலக்சாதனையை அஷ்வின் முறியடிப்பார்.

மேலும் படிக்க