• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐஎஸ்எல்: கேரளா-கொல்கத்தா அணிகள் கோல் அடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

November 18, 2017 tamil.samayam.com

ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளின் நான்காவது சீசன் கேரளாவில் மிகக் கோலாகலமாகத் தொடங்கியது.

இதன் தொடக்கவிழாவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர், பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான், பாலிவுட் நடிகை காத்ரீனா கைப், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் நீட்டா அம்பானி ஆகியோர் பங்கேற்றனர்.

நான்காவது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான அட்லட்டிகோ டி கொல்கத்தாவும் சென்ற ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. முதல் போட்டி என்பதால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இரு அணிகளும் ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு மிகவும் சிரமப்பட்டன. ஆட்டத்தின் முழு நேரம் முடிந்தபின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.

ஆட்டத்தின் போது, கொல்கத்தா அணி 4 முறை கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. அதேபோல் கேரளா அணியிம், தனக்கு கிடைத்த 2 வாய்ப்புகளை சொதப்பியது. இரு அணிகளும் கோல் அடிக்காமல் சொதப்பியதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் படிக்க