• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிம்புவிற்கு விரைவில் ரெட் கார்டு

November 24, 2017 தண்டோரா குழு

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தானே இயக்கி நடிக்கவிருக்கும் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார்.இதனையடுத்து இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில், சிம்பு சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’விற்கு இசையமைத்திருந்தார். இதன் பாடல்கள் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது.

இதற்கிடையில், கடந்த வாரம் ‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க செயலாளருமான கே.ஈ.ஞானவேல்ராஜா “சிம்புவின் பெயரை குறிப்பிடாமல் அவர்மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ‘AAA’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்திருப்பதாக கூறினார்.

மேலும், இது தொடர்பான தக்க நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெட் கார்டு கொடுத்துவிட்டதால், இந்த பிரச்சனை முடியும் வரை சிம்புவால் எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியாதாம். ஆகையால், சிம்பு ரசிகர்கள் ஷாக் மோடில் உள்ளனர்.மேலும், சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டால் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பது கேள்விகுறியாகிவிடும்

மேலும் படிக்க