• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிரித்த முகத்துடன் மரணித்த கன்னியாஸ்திரி.

June 29, 2016 தண்டோரா குழு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா(43). இவருக்குக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொண்டார். மேலும், தன்னுடைய நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இறை ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இறக்கும் தருவாயில் அருகில் இருந்த அனைவரிடமும் அனைவரும் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியவாறே உயிரிழந்தார்.

முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் உதடுகள் பல மணிநேரம் சிரித்தபடியே இருந்தது. இதையடுத்து சிரித்த நிலையில் உயிரிழந்த அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மேலும் படிக்க