• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சச்சினின் 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு!…

November 29, 2017 தண்டோரா குழு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உலக முழுவதுமுள்ள ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு சச்சினை பிடிக்குமோ அந்த அளவிற்கு அவரது ஜெர்சி எண் 10க்கும் புகழ் உள்ளது. இதனால் அந்த எண் சச்சினின் அடையாளமாகவே பார்க்கபடுகிறது.

கடைசியாக 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் 10ம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தினார். அதன்பின் அந்த எண் கொண்ட ஜெர்சியை கொண்ட யாரும் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் சர்துல் தாக்கூருக்கு 10வது எண் ஜெர்சி வழங்கப்பட்டது.அது ரசிகர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் அனுமதி வாங்கிய பின் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தெரிகிறது.

மேலும் படிக்க