• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பறிகொடுத்த இந்திய அணி

December 2, 2017 tamilsamayam.com

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி காலிறுதியில் தோற்று வெளியேறியது.

பிரான்ஸ் நாட்டின் மார்செய்லி நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை சந்தித்தது. இந்தியாவின் சவுரவ் கோஷால், திக் மேத்யூவிடம் 11-6, 6-11,11-7, 10-12, 11-9 என்ற செட்களில் தோல்வியைத் தழுவினார்.

ஹரிந்தர் பால் சந்து அடுத்த போட்டியில் இங்கிலாந்தின் டரில் செல்பையை எதிர்த்து களமிறங்கினார். இதில், 11-2, 11-4, 11-2 என்ற செட்களில் ஹிரிந்தார் வெற்றி பெற்றார். இதனால் இரு அணிகளும் 1–1 என சம நிலையை எட்டின.

கடைசி போட்டியில் இந்திய வீரர் விக்ரம் மல்ஹோத்ரா இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராப்புடன் மோதினார். இதில் விக்ரம் 11-4, 9-11, 11-8 என்ற செட்களில் வில்ஸ்ட்ராப்பிடம் வீழ்ந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2–1 என வெற்றி பெற்று அரையிறுதியில் அடியெடுத்து வைத்தது.

மேலும் படிக்க