January 5, 2018
tamil.samayam.com
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் அதிக சம்பளம் பெறும் ‘ஏ’கிரேடில் உள்ளார்.
சம்பள உயர்வு பிரச்னை :
தற்போதுள்ள இந்திய அணி வீரர்களை A,B,C என மூன்று வகையாக பிரித்து A கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடியும், B கிரேடு வீரர்களுக்கு ரூ. 1கோடியும், C கிரேடு வீரர்கள் ரூ. 50 லட்சமும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில் வீரர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என கோலி, தோனி, ரவி சாஸ்திரி தலைமையில் பிசிசிஐ தலைவர் வினோத் ராயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
தோனி நீக்கம் ?
இந்நிலையில் A,B,C கிரேடுடன் A+ என்ற கிரேடை புதிதாக சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தோனி அதே A கிரேடிலும், ஏனைய முன்னனி வீரர்கள் A+ கிரேடில் வைத்துவிட்டு, தோனியை A கிரேடிலேயே நீட்டிக்கக் கூடும் என தெரிகிறது.இப்படி தோனியின் சம்பளத்தில் கை வைக்க பிசிசிஐ புதிய திட்டத்தை தீட்டி வருகின்றது.