• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே கத்தியைக் காட்டி கொள்ளையடித்தவர் கைது.

July 11, 2016 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் சுமைதூக்கும் தொழிலாளி அப்பாஸ் நேற்று முன்தினம் இரவு காய்கறி மார்கெட்டில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் பொது, அதே மார்கெட்டில் பணியாற்றும் சக தொழிலாளியான மொகமத் அபூபக்கர்(23) என்பவர் தன்னை கத்தியைக்கட்டி மிரட்டி தன்னிடம் இருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வழிபறி செய்ததாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்த காவல்துறையினர் அபூபக்கரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர் அவர்மீது கொள்ளையடித்தல், அதற்காக ஆயுதங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கூறிய காவல்துறையினர், அபூபக்கர் மீது ஏற்கனவே குற்ற நடவடிக்கை, வழிபறி, சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தனர். இவற்றில் ஈரோட்டில் 2 வழக்குகளும், மேட்டுப்பாளையத்தில் 4 வழக்குகளும் மேலும் 1 வழக்கு கரூர் காவல்நிலைய எல்லையிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க